English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jun, 2015 | 1:12 pm
இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகை திசைதிருப்புவதற்கு இலஞ்சம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்த தமது கேள்விகளுக்கு அவுஸ்திரேலியா உரிய தெளிவுபடுத்தல்களை வழங்கவில்லை என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தோனேசியாவின் எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகள் உரியவகையில் இல்லாமையே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகை சர்வதேச கடற்பரப்பில் திசை திருப்புவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அதிகாரிகள் இந்தோனேசிய கப்பலோட்டிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக படகிலிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், கப்பலோட்டிகள் தம்மை இந்தோனேசியாவுக்கு மீள அழைத்துச் சென்றிருந்ததாக தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கபட வேண்டுமென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள், ஐ.நா சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் முற்றாக நிராகரித்திருந்தார்.
19 Jan, 2021 | 09:09 PM
09 Jan, 2021 | 05:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS