English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Nov, 2014 | 11:14 am
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 05 மீனவர்களையும் விடுவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
ராமநாதபுரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக முதல்வரை சென்னையில் நேற்று மாலை சந்தித்தபோது, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச்செய்யப்பட்டு, அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும் அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், இலங்கை சிறைகளில் வாழும் 24 மீனவர்களும், 79 விசைப் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வரிடம் இதன்போது மனு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மீனவர்களின் கூட்டமைப்பு, பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் தங்கச்சமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் மேன்முறையீடு தாக்கல்செய்வதற்கு அமர்வொன்றை நியமிக்குமாறு கோரி, சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவரின் மனைவியால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தனி அமர்வுக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை சென்னை மத்திய சிறைக்கு மாற்றுமாறு கோரியும் மனுவொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் இடம்பெறலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
27 Feb, 2021 | 06:29 PM
18 Feb, 2021 | 04:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS