English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 May, 2014 | 7:19 pm
இலங்கை கடற் பிராந்தியத்திற்குள் தமது மீனவர்கள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடக்கூடாது என தமிழக மீனவர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த 45 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைவதையிட்டு தமிழக மீனவர்கள் மீண்டும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு தமிழக மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று நடத்திய கூட்டத்தின்போது சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், இலங்கை – இந்திய மீனவர் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவருமான பி.ஜேசுராஜா நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் நடவடிக்கைகளால், 30 வருடங்களின் பின்னர் தொழிலை ஆரம்பித்துள்ள இலங்கை தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்வதாக தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன ஒன்றிணைந்து மீனவர்களின் பிரச்சினைக்கு இந்தியாவின் புதிய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பார்கள் என நம்புவதாகவும் அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜேசுராஜா மேலும் குறிப்பிட்டார்.
24 Mar, 2021 | 08:32 PM
30 Jan, 2021 | 06:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS