English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Mar, 2014 | 10:51 am
ஐந்தாவது உலகக் கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் டென் சுற்றில் இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் இலங்கை அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.
சிட்டகொங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை நிர்ணயித்த 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டபோதிலும் பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயன் மோர்கன் ஆகி|யோர் மூன்றாம் விக்கட்டுக்காக 152 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
இம்முறை உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் வரலாறு படைத்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 6 சிக்ஸர்கள் 1 பௌண்டரிகளுடன் 116 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
இயன்மோர்கன் 38 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் நுவக் குலசேகர 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி 4 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் 89 ஓட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 189 ஓட்டங்களைப் பெற்றது.
07 Mar, 2021 | 03:04 PM
04 Mar, 2021 | 07:35 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS