English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Nov, 2013 | 2:01 pm
மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நான்கு கைதிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த நான்கு கைதிகளும் தப்பிச் சென்றதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி குலதுங்க தெரிவித்துள்ளார்.
மஹர சிறைசாலை அத்தியட்சகரின் தலைமையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தப்பிச் சென்ற கைதிகளின் விபரங்கள் மற்றும் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் மாஅதிபரிடமும் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வழிப்பறிக் கொள்ளைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தண்டனை அனுபவித்து வந்த நான்கு கைதிகளே மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களது தண்டனை காலம் நிறைவடைவதற்கு மேலும் சில வருடங்கள் எஞ்சியிருந்தாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி குலதுங்க அறிவித்துள்ளார்.
14 Dec, 2019 | 05:07 PM
07 Dec, 2019 | 04:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS