Colombo (News 1st) சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியமாவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா, இல்லையா என்பது தற்போதை...