22ஆவது திருத்தம் தொடர்பான பரிசீலனை

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை

by Staff Writer 01-09-2026 | 7:54 AM

COLOMBO (News 1st) 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (01) ஆரம்பமாகின்றது. 

இந்த மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நேற்று (31) நியமிக்கப்பட்டது.

நீதியரசர்கள் குழாத்தின் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படுகின்றார். 

நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். 

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (31) நிறைவடைந்த நிலையில் இதுவரை 50 இற்கும் மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.