.webp)
-559871.jpg)
Colombo (News 1st) 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாத்தின் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படுகின்றார்.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
மனுக்கள் மீதான பரிசீலனைகளை நாளை(01) முதல் முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
