.webp)
-557387.jpg)
Colombo (News 1st) - அனுராதபுரம் இசுருமுனி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாடசாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த 27 வயதான 2 இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
