பெரும்பான்மையை நிரூபிக்க தயார் - விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முன்னிலை : பெரும்பான்மையை நிரூபிக்க இருவார கால அவகாசம் கோரி மின்னஞ்சல்

by Staff Writer 05-05-2026 | 3:18 PM

Colombo (News 1st) ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுக்குமாறும் 02 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாரெனவும் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கருக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் இன்று(05) தமிழகத்திற்கு திரும்பவுள்ள நிலையில் விஜய்யின் இந்த கோரிக்கைக்கு அவர் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்​தலில் விஜய்​யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களை பெறாத​தால், தமிழகத்தில் தற்போது 'தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கு இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம் ஆதரவு கோரு​வது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் தீவிர ஆலோசனை​யில் ஈடு​பட்​டுள்​ளதாக த ஹிந்து தமிழ் செய்தி வௌியிட்டுள்ளது.

அதிமுக​வின் ஆதர​வை கோருதல் அல்லது காங்​கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்​சிளை உள்ளடக்கிய திமுக கூட்டணிக் கட்​சிகளின் ஆதரவை கோருதல் என இரண்டு வாய்ப்புகள் தவெகவுக்கு தற்போது காணப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி, தொலைபேசி வாயிலாக விஜய்​யை தொடர்புகொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்​கள் வௌியாகியுள்ளன.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி செயற்படுவார் என்ற நம்பிக்கை காணப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

‘தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டால், மாநில நிர்வாக குழு கூடிய ஆலோசனை நடத்தப்படுமென இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

தேர்​தலுக்கு முன்​னர், கூட்​ட​ணி பேச்​சு​வார்த்​தைகள் நடைபெற்றுவந்த நிலை​யில், கூட்​ட​ணி கட்​சிகளுக்கு ‘'ஆட்​சி​யிலும் அதிகாரத்​தி​லும் பங்​கு’' என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1967ஆம் ஆண்​டுக்கு பின்னர் திமுக மற்றும் அதி​முக ஆகிய இரு திரா​விட கட்​சிகளின் ஆட்​சியே தமிழகத்தில் நடை​பெற்றுவந்த நிலை​யில் இம்முறை தேர்​தல் இதற்கு முற்​றுப்​புள்ளி வைத்​துள்​ளது.

“1967, 1977 சட்​டப்​பேரவை தேர்​தல்​களை போன்று 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் தமிழகத்​தில் புரட்​சிக்கு வழி​வகுக்​கும்” என தவெக​வின் இரண்டாம் ஆண்டு ஸ்தாபக விழாவின் போது விஜய் தெரி​வித்​திருந்தார்.

அவர் கணித்​தது போன்று இம்முறை தமிழக தேர்​தல் முடிவு​கள் அமைந்​துள்​ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, தமிழக முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்துள்ளார்.

தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு சிறந்த எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி 73 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இம்முறை தேர்தலில் மற்றுமொரு முக்கிய வேட்பாளராக இருந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சுமார் 4 வீத வாக்குகளை பெற்றுள்ள போதும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், எடப்பாடி கே.பழனிசாமி தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பா.ஜ.க ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.