CID-யில் ஆஜரான நாமல் ராஜபக்ஸ

CID-யில் ஆஜரான நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 03-02-2026 | 11:54 AM

Colombo (News1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(03) காலை சென்றார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த அழைப்புக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளார்.

தடுப்பு காவலில் உள்ள திட்டமிட்ட குற்ற செயலில் ஈடுபடும்  கும்பலின் கெஹெல்பத்தர பத்மேவுடன் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்த விசாரணைகளுக்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.