LRC-இன் பணிப்பாளர் நாயகம் பணிநீக்கம்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பணிநீக்கம்

by Staff Writer 05-10-2025 | 8:33 AM

Colombo (News 1st) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான நிலத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கோப் குழுவில் வௌிக்கொணரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக தற்போது தினேகா ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.