.webp)
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளுடன் வவுனியா - செட்டிக்குளம் - மாங்குளம் பகுதியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு(03) நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனமொன்றில் 25 கிலோகிராம் பீடி இலைகனை கொண்டு சென்ற இருவரை கைதுசெய்த பொலிஸார்
குறித்த சந்தேகநபர்களுக்கு உதவிய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 21, 28, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.