.webp)
Colombo (News 1st) செப்டம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,92,902 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.