.webp)

Colombo (News 1st) வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் லக்ஷித மனோஜ் வீரபாஹு ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
02 ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தரவுகளை மாற்றி போலியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
