.webp)
அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் நோர்வூட் - இன்ஜஸ்ட்ரீ தோட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் நேற்று(17) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட்டை சேர்ந்த 60 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.