.webp)
Colombo (News 1st) திவுலப்பிட்டி தூனகஹ பகுதியிலுள்ள உணவகமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் குறித்த நபரின் மனைவி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பிரச்சினையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தூனகஹ பகுதியிலுள்ள உணவகமொன்றுக்கு குறித்த தம்பதியினர் நேற்றிரவு(16) சென்றுள்ளதுடன் உணவகத்தின் உரிமையாளருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரால் குறித்த தம்பதியினர் கூரிய ஆயுதத்தங்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் படுகாயமடைந்த 46 வயதுடைய கணவன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.