.webp)
பொரளை - சஹஸ்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
சஹஸ்புர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிக்கெட் போட்டிக்காக கடந்த 07ஆம் திகதி இரவு சஹஸ்புர விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்திருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருந்தனர்.