.webp)
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான கடிதம் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.