மானிய விலையில் தேங்காய் உரம் வழங்க நடவடிக்கை

மானிய விலையில் தேங்காய் உரம் வழங்க நடவடிக்கை

by Staff Writer 23-06-2025 | 10:05 AM

Colombo (News1st) தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தேங்காய் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை சபை ஆகியவை இணைந்து சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பலுகஸ்வெவ தோட்டத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மானிய விலையில் தேங்காய் உரத்தை வழங்கும் தேசிய திட்டத்திற்கு இணங்க தென்னை பயிர்ச்செய்கை சபை 146 தென்னை செய்கையாளர்களுக்கு 30 மெட்ரிக் தொன் தேங்காய் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.