.webp)
Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 55 சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வவுனியா பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி காரொன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையி்ல் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.