.webp)
Colombo (News1st) இஸ்ரேலில் பணிபுரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் ஐவர் நாட்டிற்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்புவது இடை நிறுத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு செல்லவிருந்த 119 பணியாளர்கள் நாட்டில் உள்ளனர்.
மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதன் பின்னர் உடனடியாக அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.