.webp)
Colombo (News 1st) எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, குருணாகல், மொனராகலை, கேகாலை, கண்டி, பதுளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,986 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
14 பேர் உயிரிழந்துள்ளனர்.