.webp)
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(11) முற்பகல் பேர்லின் நகரை சென்றடைந்தார்.
பேர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றிரவு(11) ஜேர்மனி நோக்கி பயணமானார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜேர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier ஆகியோருக்கு இடையில் இன்று(11) சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.