.webp)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று(09) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சுங்கத்தில் சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்று(09) காலை 10 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வௌியேறினார்.
தம்மிடமிருந்த விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான பட்டியலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கியதாக உதய கம்மன்பில இதன்போது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.