.webp)
சுற்றுலா கேந்திர நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து மாகாணங்களிலும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.
அபிவிருத்திக்கான உரிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் 4 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 தசாப்தங்களாக நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் உரிய திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்யப்படவில்லையென பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க குறிப்பிட்டார்.
குறித்த இடங்களை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பிரதான பணியாகும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.