.webp)
Colombo (News1st) சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும் (08).
நம்மை நிலைநாட்டும் சமுத்திரங்களை நாம் நிலைநாட்ட வேண்டும் என்பதே இம்முறை சமுத்திர தின தொனிப்பொருளாகும்.
சர்வதேச சமுத்திர தினத்தின் தேசிய நிகழ்வு கொழும்பில் இன்று(08) நடைபெறவுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் உள்ள சமுத்திரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்குடன் 1992 ஆம் ஆண்டு சமுத்திர தினம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில் கனேடிய நிறுவனமொன்று முதன் முதலாக சர்வதேச சமுத்திர தினம் தொடர்பான யோசனையை முன்வைத்தது.
அதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையால் 2008 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக ஜூன் 08 ஆம் திகதி சர்வதேச சமுத்திர தினமாக அறிவிக்கப்பட்டது.
மனிதர்களின் செயற்பாடுகளால் சமுத்திரத்தில் ஏற்படும் தாக்கம், சமுத்திரம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொள்ளுதல், உலகில் உள்ள மக்களுடன் ஒருங்கிணைந்த திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
புவியில் இந்தளவு நீர் இருந்தாலும் அதில் 0.3 வீதத்தையே மக்கள் பருகக்கூடியதாக உள்ளது.
97 வீதமான நீர், உவர்நீராக காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும்.
புவியில் வாழும் உயிரினங்களில் 95 வீதமானவை சமுத்திரத்தில் வாழ்கின்றன.