.webp)
Colombo (News1st) கடந்த 5 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
43 துப்பாக்கிப்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றில் 29 துப்பாக்கிப்பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.