.webp)
Colombo (News1st) சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று(06) கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர்கள் இன்று(06) கைது செய்யப்பட்டனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவர்கள் பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.