.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு - நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.