.webp)
Colombo(News1st)இஞ்சி, மஞ்சள் செய்கையை நகர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரமான பொலித்தீன் பைகள், சிறிய தொட்டிகள் மற்றும் ஒரு தடவை பயன்படுத்திவிட்டு வீசப்படும் கொள்கலன்களில் இந்த செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற மக்களின் வருடாந்த தேவைக்கு அமைவாக இஞ்சி, மஞ்சள் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்கான செலவுகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.