பதுளை-பண்டாரவளை வீதியில் கனரகவாகனங்கள் பயணிக்க தடை

பதுளை - பண்டாரவளை வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

by Staff Writer 10-12-2023 | 7:10 PM

Colombo (News 1st) பதுளை - பண்டாரவளை வீதி, இன்று(10) மாலை 06 மணி முதல் கனரக வாகனங்களுக்காக மாத்திரம் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

06 ஆம் கட்டைப் பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் E.M.L. உதயகுமார தெரிவித்தார்.