.webp)
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை மறுதினம்(27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமானவரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.