.webp)
Colombo (News 1st) அம்பாறை - மாவடிப்பள்ளி பகுதியில் முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை கோரக்கோவில் பகுதியில் வசித்து வந்த 04 பிள்ளைகளின் தந்தையான 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(22) மாலை ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி கீரை பறித்துக் கொண்டிருந்த குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருந்தது.
சடலம் மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.