.webp)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இன்று சென்றிருந்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
நீர்த்தாரை பிரயோகத்திற்கான வாகனத்துடன், கலகத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆணைக்குழுவின் உப தலைவருடனான கலந்துரையாடல் தீர்வின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.