அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதிவியிலிருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா

by Staff Writer 27-02-2023 | 2:24 PM

Colombo (News 1st) அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(27) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக மயந்த திசாநாயக்க கடந்த 23 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.