.webp)
Nepal: நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று (22) பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக ஜனவரி 24 ஆம் திகதி நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.