இந்திய விசா விண்ணப்ப நிலையம் நாளை(20) மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் நாளை(20) மீள திறப்பு

by Staff Writer 19-02-2023 | 2:27 PM

Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையத்தை நாளை(20) முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை(20) முதல் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.