.webp)
Colombo (News 1st) 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கும் தடுப்புக்காவலில் உள்ள 31 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாக விடுவிக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.