.webp)
Colombo (News 1st) களுத்துறை தெற்கில் ரயில் தடம்புரண்டதால் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று பகல் தடம்புரண்டது.
இதனால் கொழும்பு முதல் களுத்துறை வடக்கு வரையில் கரையோர ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது.