கொழும்பின் பல பகுதிகளில் நாளை (21) நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (21) 9 மணித்தியால நீர்வெட்டு

by Bella Dalima 20-01-2023 | 5:42 PM

Colombo (News 1st) கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

நாளை  (21)  முற்பகல் 11 மணி முதல் இரவு 08 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு - தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில்   நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.