யாழ்.வெற்றிலைக்கேணியில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுதலை

by Staff Writer 02-01-2023 | 7:12 PM

Colombo (News 1st) இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் இன்று(02) ஆஜர்படுத்தப்பட்ட போது, நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் தமிழக மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகை அரசுடமையாக்குவதற்கு பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விடுலை செய்யப்பட்ட மீனவர்களை மிரிஹானை தடுப்பு முகாமினூடாக தமிழகத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடந்த 21ஆம் திகதி கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது ஒரு ட்ரோலர் படகுடன் இந்த 12 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே, கடந்த 29ஆம் திகதி யாழ்.வல்வெட்டித்துறை கரையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.