.webp)
Colombo (News 1st) இன்றைய(14) தினத்திற்குள் முட்டை விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வௌ்ளை முட்டைகளை 43 ரூபாவிற்கும் சிவப்பு முட்டைகளை 45 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(14) பிரசன்ன அல்விஸ் மற்றும் ஹேமா ஸ்வர்ணாதிபதி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.