.webp)
Colombo (News 1st) களுத்துறையில் மொரன்துடுவ - பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 11.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 18 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.