.webp)
Colombo (News 1st) யாழ். கோப்பாய் - கைதடி வீதியில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது டொலமைட் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மர நடுகைக்காக மேற்கொள்ளப்பட்ட சிரமதானத்தின் போதே, டொலமைட் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மணல் சிதறியதில், சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களே இன்று(13) காலை சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.