அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

by Staff Writer 23-10-2022 | 3:33 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உனவட்டுன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரும் ஹபராதுவ பொலிஸாரும் இணைந்து இன்று(23) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர்.