மன்னாரை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்

மன்னாரை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்

by Staff Writer 17-10-2022 | 3:49 PM

Colombo (News 1st) இலங்கையிலிருந்து மேலும் 06 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடிக்கு அருகே முதலாம் மணல்திட்டை இவர்கள் இன்று(17) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

முதலாம் மணல்திட்டிலிருந்த இலங்கையர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, இராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேர், யாழ்ப்பாணத்திலிருந்து பைபர் படகின் ஊடாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இலங்கை அகதிகள் 06 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் இதுவரை இலங்கையிலிருந்து 181 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.