.webp)
Colombo (News 1st) யாழ். கோப்பாயில் போதை வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு முருகன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் போதை வில்லைகளை விற்பனை செய்துகொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 வயதான சந்தேகநபரிடமிருந்து 94 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.