ஜனாதிபதி ரணில் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்

by Staff Writer 29-09-2022 | 11:33 AM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினான்ட் ஆர். மார்கோஸ் (Ferdinand R. Marcos) ஆகியோருக்கு இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று மணிலா நகரில் இடம்பெற்றுள்ளது. 

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிலிப்பைன்ஸூக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று(28) ஆரம்பித்திருந்தார்.   

பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.