நேபாளத்தில் மண்சரிவில் சிக்கி ​17 பேர் பலி

நேபாளத்தில் மண்சரிவில் சிக்கி ​17 பேர் பலி

by Bella Dalima 17-09-2022 | 6:20 PM

Nepal: நேபாளத்தின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

மண்சரிவால் ஏழு மாவட்டங்களை இணைக்கும் பீம்டுட்டா நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதுடனும், தகவல் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்செம் மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில், 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சுர்கெட் மாவட்டத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.